நாங்களும் பார்த்துட்டமில்ல கடந்த கொஞ்ச நாட்களாகவே பதிவுலத்தில் எந்திரனை கடித்து மென்று விழுங்கி வாந்தியும் எடுத்துவிட்டார்கள் நிறையப்பேர் நான் கொஞ்சம் லேட் எல்லாரும் எல்லாத்தயும் எழுதிட்டாங்க நான் என்னத்த எழுதி என்ன பன்ன என்று நினைத்தே காலம் ஓடிவிட்டது.. நேத்து வந்த பயலெல்லாம் எந்திரன பத்தி எழுதுறான் நீ.. ஆறு மாசமா பதிவுலகத்துல் இருக்கே நீ.. எழுதக்கூடாதா என என் மனசாட்சி என்னையே கேள்வி கேட்குது அதுதான் ஆரம்பிச்சாச்சி..ரெடி ஸ்டார்ட்..
எந்திரனின் கதை இதுதான் அப்பிடின்னு ஆரம்பிச்சா நீங்களெல்லாம் கடுப்பாகிருவிங்கன்னு தெரியும். அதனால டிரக்கட்டா மேட்டருக்கு போயிடுவோம்.. இது வருவதுக்கு முன்னிருந்த எதிர்பார்ப்பு வந்தபிறகு குறைந்து போனது.. காரணம் ஷங்கரிடம் இதைவிட நிறைய எதிர்பார்த்தேன் ஷங்கரின் அன்னியன் திரைப்படம் என்னில் ஏற்படுத்திய தாக்கம் எந்திரன் ஏனோ ஏற்படுத்தவில்லை.. இது இந்திய சினிமாவிற்கு புதுசு என்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழினுட்பத்திக்காகவும் பாராட்டலாம் என்றாலும் முழுமனதாக திருப்திபடமுடியவில்லை..
தமிழ் சினிமாவில் ஹீரோ எப்படிப்பட்டவராயிருந்தாலும் காதலிக்கனும் டூயட் பாடனும் என்பது எழுதப்படாத விதியாச்சே.. இதிலும் ரஜினி காதலிக்கிறார் டூயட் பாடுகிறார்.. ஆனால் எவ்வளவு பாடுபட்டும் வயதைத்தான் மறைக்கமுடியவில்லை.. வசீகரன் ரஜினியைவிட சிட்டி ரஜினிதான் கலக்கல் அதுவும் வில்லனாக மாறும் தருனங்களில் நல்ல நடிப்பு..கருப்பு ஆடு உள்ள வந்ததாக கூறிவிட்டு மே,,, மே,,, என்று சொல்வாறே சூப்பர் ஐஸ் படம் முழுக்க வருகிறார் திரைக்கதை அப்படி.
முதலில் சிட்டியை உருவாக்கி செயற்படுத்தும் காட்சிகளில் ஒரு ஆங்கிலேய படம் பார்க்கும் உணர்வு வந்தாலும்.. பின் ஐஸின் மேல் சிட்டிக்கு காதல் வரும் காட்சிகளில் இல்ல இல்ல இது தமிழ் படம்தான் எங்கிற உணர்வைத்தருகிறது.படத்தில் கருனாஸ் சந்தானம் பாத்திரங்கள் கொஞ்சம் சிரிக்க உதவினாலும் மனதோடு ஓட்டவில்லை.. கிராபிக்ஸ் காட்சிகள் அழகு.ஆனால் அதுமட்டும் போதாது ஒரு படத்தின் தரத்தைச்சொல்ல. இது ஒரு மசாலா பொழுது போக்கு படம் என்ற வகையில் பார்த்தால் நல்லதொரு பொழுது போக்குத்தான்.. ஆனால் இதுஒரு மைல்கல் இந்திய சினிமாவையே மாற்றியபடம் என்றால் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளமுடியாது..
படத்திற்காக அதிகமாக மெனக்கெட்டிருப்பது புரிகிறது..இதுமாதிரியான திரைப்படங்களின் வருகைக்கு இது முதற்படியாக அமையும் என இதை பாராட்டலாம்.. மற்றபடி படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் ஒரு ரோபோவால் அவ்வளவு அவசரமாக ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கமுடியுமா..? இதுமாதிரியான உண்மைக்கு புறம்பான வெறும் கற்பனைக்கு மட்டுமே எட்டக்கூடிய வகையில் நிறைய ஆங்கிலப்படங்கள் வந்திருக்கின்றன் ஆனால் அதில் கற்பனை மட்டும்தான்.. அதிலும் ஒரு உண்மைதன்மை இருக்கும் இதிலே அது மிஸ்ஸிங்..
பாடல்களை பொருத்தவரை பரவாயில்லை ரகம்.. பாடல் காட்சியமைப்புகளும் அழகு. இரும்பிலே ஒரு இருதயம் முளக்குதே…. புதிய மனிதா பாடல்கள் என்னைக்கவர்ந்தவை ரஹ்மான் பின்னனி இசையிலும் கலக்கியிருக்கிறார்.. இறுதிக்கட்ட காட்சிகள் பாம்புபோல் உருவாக்கப்பட்ட காட்சிகள் நல்ல விருந்து குழந்தைகள் உட்பட.. (ஒரு வேளை இது குழந்தைகளுக்கான படமாயிருக்குமோ சரி விடுவோம் நாமலும் குழந்ததானே…) யாரப்பா அது எகத்தாளமா சிரிக்கிறது…
படத்தின் எடிட்டர் ஆண்டனி.. இசைக்கலவை ரசூல் பூக்குட்டி.. படத்தின் கலை இயக்குனர்.. ஒப்பனைக்கலைஞ்சர்.. நடன இயக்குனர்கள்.. இனை இயக்குனர்கள்.. ஒரு காட்சியில் வந்துபோகும அமரர் ஹனிபா.. வில்லனாக வரும் டென் சொங்கப்பா.. எழுத்தாளர் சுஜாதா.. பாடலாசிரியர்கள் வைரமுத்து,கார்க்கி (யார் இந்த கார்க்கி அவருக்கு பிளாக் எல்லாம் இருக்காமே தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) இரானுவ பரிசோதனையில் சிட்டியால் சொல்லப்படும் கணிப்பொறிக்கும் காதல்தந்த கண்ணிப்பொறி.. என்ற கவிதைக்கு சொந்தகாரரான நா.முத்துக்குமார் ஆகியோருக்கும் பாராட்டுகள்.. ஒரு கலைஞ்சனை வெறுமனே குற்றம் மட்டும் சொல்லாமல்.. அவனின் திறமையை ஊக்குவிக்கும்போதுதானே அவனிடமிருந்து புதியவை ஊற்றெடுக்கும்..
ஷங்கரின் வித்தியாசமான பார்வைக்கும் உழைப்புக்கும் கண்டிப்பாக பாராட்டலாம்.. ஆனால் இந்தபடத்த வெற்றிபெற செய்ய வேண்டும் என்ற நோக்கில் சன் டீவியின் ஓவர் பில்டப்பும் ரஜினி ரசிகர்களின் முட்டாள்தனமான செய்கைகளும் தாங்கமுடியல்ல நான் சொல்ல வந்தத சொல்லியாச்சி இனி நீங்க சொல்றத சொல்லுங்க..