நான்..நீ…!

மழை தேடும் பூமி நான்..
மேகம் சுமக்கும் வானம் நீ..
இரவோடு வரும் இருள் நான்..
என்னைத்தழுவ வரும் நிலவு நீ..
அயர்ந்து தூங்கும் அதிகாலை நான்..
அடித்து எழுப்பும் விடியல் நீ…
எழும்ப மறுக்கும் சோம்பல் நான்..
உற்சாகம் தரும் தேனீர் நீ..
காட்சிகள் தொலைத்த கனவு நான்..
காட்சிகள் தரும் கண்கள் நீ..
எழுத நினைக்கும் கவிதை நான்..
வர மறுக்கும் வார்த்தை நீ…
அடம்பிடிக்கும் குழந்தை நான்..
ஆசைகாட்டும் திருவிழா நீ..
தினம் வரும் பகல் நான்..
எனக்குள் வர முடியா இரவு நீ..
வாசிகசாலை புத்தகங்கள் நான்..
வாசித்துமட்டும் செல்லும் வாசகி நீ..
எதுவரை நான்….
அதுவரை நீ…!

Scroll to Top