இன்று எனக்கு பிறந்த நாளாம்…!

இன்று எனது பிறந்த நாளாம்.. நான் மட்டுமா பிறந்தேன். ஒவ்வொரு பிரசவத்தின் போதும் ஒவ்வொரு தாயும் இறந்தே பிறக்கிறாள்.அந்தவகையில் என் தாய்க்கும் இனறு பிறந்தநாள்தான் ஆதலால் அன்னையே உன்னை போற்றுகிறேன்..
தாயே
பத்து மாதங்கள் சுமந்தாய்
கருவினிலே..
பல காலங்கள் சுமந்தாய்
நெஞ்சினிலே..
உன் உயிரை
என் உனவாக்கினாய்..
உன் உதிரத்தை
என் உடலாக்கினாய்…! 
துடி துடித்துப்போனாய்
துயரங்கள் கண்டாய்
தூக்கம் தொலைத்தாய்
என்னை ஈன்றெடுத்தாய்..
சில நிமிடங்கள்
நீயும் இற்ந்தே பிறந்தாய்
வார்த்தைகளினால்
வரைந்திட முடியா
வேதனைகளினால்…!


உலகை கண்டேன்
உன் கண்களினால்
உனர்வுகள் கொண்டேன்
உன் ஸ்பரிசங்களால்..
பாசங்களால்
பரவசம் கொடுத்தாய்.
மழலைச்சிரிப்பால்
மனம் மகிழ்ந்தாய்…!
தாயே
உன் பார்வைகளால்
பசியாருகிறேன்..
உன் வார்த்தைகளால்
கவலை மறக்கிறேன்..
உன் அன்பினால்
நானும் அழகாகிறேன்..
தாயே
உன் பாதங்களுக்கடியில்
சொர்க்கமாம்
சொல்கின்றனர்..
நான் சொல்கிறேன்
உன் மடியில்
புரண்டு விளையாடிய
காலம்தான்
சொர்க்கத்தில் வாழ்ந்த
பொற்காலம்..

   

 ஆகாயம் நோக்கி
பறந்த பறவை
இரை தேடி
பூமிக்கு வருவது போல
நான்
உலகின் எங்கு சென்றாலும்
என் ஞாபங்கள்
மட்டும்
உன்னிடம் வந்து சேரும்..!

Scroll to Top