என்றுமே
அழகானதுதான்
குழந்தைகள் உலகம்
கவலைகள் கிடையாது
கண்ணீர் கிடையாது..
பூக்களால்
செய்யப்பட்ட மனசு
புன்னைகைகளால்
செய்யப்பட்ட அழகு..
அவ்வப்போதாவதாவது
சென்று வாருங்கள்
அவர்கள் உலகத்திற்கு..
அன்பு பாசம் நிம்மதி
அங்கே இலவசம்…
அவர்களோடு கொஞ்சுங்கள்
பேசுங்கள்
சிரியுங்கள்
மழலையாகிவிடுங்கள்
மறந்துவிடுங்கள்
உங்களை…
பிஞ்சு மழலை மொழியை
அனுபவியுங்கள்
உலகின்
அனைவருக்கும் புரியும்
அழகிய மொழியது…
புன்னகை இனிப்புகள்
கொடுங்கள்
இனிக்கும் அவர்கள் மனசு…
பூக்களாய் நேசியுங்கள்
பரிசாய் பெறுங்கள்
புன்னகைகளை…
VOTE PLS..