“உண்ணுங்கள் பருகுங்கள் வீன்விரயம் செய்யாதீர்கள்”

உணவை வீனாக்காதீர்கள் என அதிகமாய் எழுத நினைத்தாலும், இந்த படங்களைத்தாண்டி எதை எழுதிவிட முடியும் இதுவே ஆயிரம் கதைகள் கண்முன்னால் காட்சிப்படுத்துகிறது..

“உண்ணுங்கள் பருகுங்கள் வீன்விரயம் செய்யாதீர்கள்” என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன் மொழிந்த ஓர் நபி பொழி. எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு பொன்மொழி..

ஆபிரிக்காவில் மட்டும்தான் பட்டினியால் உயிர்கள் வாடுகிறதா? ஏன், நம் பக்கத்து வீட்டிலும் வாடலாம்! நம் தேவைக்கு அதிகமாகி குப்பையில் போடுபவை அவர்களின் தேவையாகலாம், அவர்களின் பசியை போக்கலாம்..

உணவு என்பது நமக்கு கிடைத்த பொக்கிஷம். அதை நாமும் அனுபவித்து, இல்லாதவர்களுக்கும் பகிரலாம். வீனாக்குவதை தவிர்த்து.

நல்லதாய் சுவாசிக்க
மரம் வளர்ப்போம்
நல்லதாய் வாழ
மனிதம் வளர்ப்போம்..

Scroll to Top