இரவு அழகானது
இருள் வந்து மூடிக்கொண்டாலும்
இயற்கை அழகானது
இடையிடையே வந்து சீண்டிச்செண்றாலும்
இயற்கையின் மௌன மொழியும்
எழுத்தில் சொல்ல முடியா
இலக்கியங்கள்..
வானவெளிகளில்
பறந்து திறிவோம்
பரவசங்களை சிறகுகளாக்கி..
கண்களை மூடிக்கொள்ளுங்கள்
மனதை திறந்துகொள்ளுங்கள்
ரசிக்க தொடங்குங்கள்..
தனிமையான
உலகம் வேண்டுகிறேன்
தொலைந்து போவதற்கு
தனிமைக்குள்..
மழை பொழியும் பொழுதுகளில்
நனைந்தேவிடுகிறது
மனதும்
வண்ணத்துபூச்சிகளாய் மாறிவிடுகிறேன்
பூக்களை கானும் போதெல்லாம்
தேன் திருடுவதற்காய் அல்ல
ரசிப்பதற்காய்
திருடும் அழகை..
இருள் சூழ்ந்த இரவுக்கு
இலவச மின் தோரணம்
உன் அழகு..