Kannazhage Kannazhage Song Lyrics in Tamil
கண்ணழகே கண்ணழகே….
முத்தழகே முத்தழகே….
கலைமானின் தோலழகே….
தமிழ் கம்பனின் பாட்டழகே….
குயில் ஒன்னு நான் தரவா
பாட்டோடு நீ தூங்க…
மயில் ஒன்னு நான் தரவா
தோகை மேலே நீ தூங்க…
மடி மேலே தாலாட்ட
மகராணி வருவாளா?
தோள் மேலே சீராட்ட
தென்றல் இவள் தருவாளா?
கண்ணழகே கண்ணழகே
முத்தழகே முத்தழகே…
~~~
கோடை வெயிலினிலே
குடை பிடித்து காத்திருப்பேன்…
கொட்டும் மழையினிலே
கண் இமைக்குள் உனை வைத்தேன்…
வெள்ளி நிலவென்று
கவி வடித்து சொன்னேனே…
தூரம் நீ செல்ல
மனம் துடித்து தவித்தேனே…
நெஞ்சமே நெஞ்சமே
தினம் உயிரில் கலந்து மகிழ்வேன்…
ஜீவனே ஜீவனே
மனம் திறந்து வாழ அழைத்தேன்…
தாலாட்டு நான் பாட
தனியாக நீ கேட்க
நானாக தவமிருப்பேன்….
கண்ணழகே கண்ணழகே
முத்தழகே முத்தழகே…
~~~
வானம்பாடியாக மெட்டு சொல்லி
கானம் எடுப்பேன்…
தேனில் ஊரவைத்த செந்தமிழை
காதில் சொல்லுவேன்…
ஏழு ஸ்வரங்களிலே
துள்ளி வரும் ராகம் அள்ளுவேன்…
மூங்கில் துளைகளிலே
என் மூச்சை தூது விடுவேன்…
வெண்ணிலா வெண்ணிலா
தரை இறங்க மேடை அமைப்பேன்…
உன்னையே எண்ணியே
நெஞ்சு உருகி நாளும் உரைந்தேன்…
தாலாட்டு நான் பாட
தனியாக நீ கேட்க
நானாக தவமிருப்பேன்…
.
கண்ணழகே கண்ணழகே
முத்தழகே முத்தழகே…