பால்நிலாவினும் ஒரு நொம்பரம்..!!

சில மலயாள பாடல்களையும் தமிழ்பாடல்களைப்போல் ரசிக்க முடிகிறது
அவற்றை ரசிப்பதில் இசை,பாடகர்களின் குரல்தான் முன்னிலையில் இருந்தாலும் சில பாடல்களின் வரிகளும் தமிழ்பாடல்கள் தரும் தாக்கத்தை தருகிறது.. மலயாள மொழியின் சாதாரன பேச்சு வழக்கை சீக்கிரமாக புரிந்து கொண்டாலும்(சிலருக்கு புரிவதேயில்லையாம்) பாடல்களின் அர்த்தங்களை புரிந்து கொள்வது கடினமே. காரனம், அவை சிறந்த மொழி-இலக்கண நடையில் எழுதப்படுவதேயாகும்..

என்னைப்பொறுத்தவரை மலயாள மொழி படங்களை புரிந்துகொள்வதற்கு அம்மொழி ஒரு தடையே இல்லை!! தூய தமிழிலிருந்து பிரிந்து சென்றே மலயாள மொழி உருவாகியதாக எங்கோ படித்த ஞாபகம்.. அவர்கள் பேசும் போதே இதை நாம் அறிந்துகொள்ள முடியும்.. அநேகமான வார்த்தைகள் நம் தூய தமிழ் வார்த்தைகளே! ஆனால் சில மலயாளிகளுக்கு தமிழும் சில தமிழர்களுக்கு மலயாளமும் கொஞ்சம்கூட புரியவில்லை என்பதுதான் ஆச்சர்யம்!  நான் அவதானித்ததில் இன்னுமொன்றும் எனக்கு நன்றாக விளங்கியது.. இலங்கை முஸ்லிம்களாகிய எங்களின் பேச்சு வழக்கிற்கும் மலயாளிகளின் பேச்சு வழக்கிற்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது..  

இப்பாடலும் அப்படியே ஆரம்பம் புரியாவிட்டாலும் இடையில் வரும் வரிகள் புரிகிறது.. கே.ஜே.ஜேசுதாசின் குரலில் இடம்பெற்ற ஓர் அருமையான பாடல்!!  பாடல் வரிகளும் முற்றுமுழுதாக புரியவில்லை என என்னால் சொல்ல முடியாது கால்வாசியாவது புரியவே செய்கிறது..
உங்களுக்கு ஏதாவது புரியுதான்னு பாருங்களேன்..

பால்நிலாவினும் ஒரு நொம்பரம்
பாதிரா கிளி எந்தினீ மௌனம்
சாகரம் மனசிலுண்டெங்கிலும்
கரையுவான் ஞங்களில் கண்னு நீரில்லா..

(சிறுவர்கள் குழுவாக)
மன்னினு மரங்கள் பாரம் மரத்தின் சிளைகள் பாரம்
இலையில் தூவல்லும் பாரம் கூடொழிஞ்ச பக்ஷிகள்..
பக்ஷிகளுக்கு சிறகு பாரம் சிறகின்னு தூவல் பாரம்
தூவல்லும் காற்றின்னு பாரம் காற்றிலாடும் கோலங்கள்..


(பால்நிலாவினும்)

மானம் மீதே தாரங்கள் சிம்மி சிம்மி கத்தும்போல்
இருட்டிலே தெம்மாடி கூட்டில் துடிக்குமே தப்பும் தாளங்கள்..


(மன்னினு மரங்கள் பாரம்)

(பால்நிலாவினும்)


வின்னின் கண்ணீர் மேகங்கள்
மன்னின் கண்ணீர் தாகங்கள்
ஒரிக்கலும் செய்யா மோகங்கள்
நனைக்குமோ நெஞ்சின் தீரங்கள்..


(மன்னினு மரங்கள் பாரம்)

(பால்நிலாவினும்)

Scroll to Top