எட்டு வயதுச் சிறுவன் அவன். அவனுடைய ஆறு வயதுத் தங்கைக்கு லூகேமியா நோய் இரத்தம் மாற்றினால் தான் அவள் உயிர்ப் பிழைப்பாள் என் கின்றனர் மருத்துவர்கள், சிறுவனுடைய இரத்தம் ஒத்துப் போகுமா என சோதித்தார்கள். சரியாக பொருந்தியது.
‘தங்கைக்கு இரத்தம் கொடுக்க சம்மதமா?’ மருத்துவர்கள் கேட்டார்கள். கொஞ்ச நேரம் யோசித்த சிறுவன் ‘சரி’ என்றான். அவனிடமிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக எடுக்கப்பட்டது. அது சிறுமியின் உடலுக்குச் சென்று கொண்டிருந்தது.
சிறிது நேரத்துக்குப் பின் அருகில் இருந்த தாதியை அழைத்த சிறுவன் கேட்டான். ‘நான் எப்போது சாகத் தொடங்குவேன்?’
தாதி அதிர்ச்சியடைந்தார்.
தனது இரத்தத்தைக் கொடுத்தால் தங்கை பிழைத்துக் கொள்வாள். ஆனால் தான் இறந்து விடுவோம் என சிறுவன் நினைத்திருக்கிறான். தனது உயிர் போனாலும் பரவாயில்லை தனது தங்கை பிழைக்கட்டும் என முடிவு செய்திருக்கிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இதுதான் தன்னலமற்ற அன்பின் வடிவம்.
இது, இன்று தினகரன்(இலங்கை) பத்திரிகையில் வெளிவந்துள்ள ஓர் அருமையான விவரண கட்டுரையின் முதல் பகுதி.. இன்றைய மனிதநேயமில்லாத சுயநலமான வாழ்க்கையோட்டத்துக்கு இவ்வாறான கட்டுரைகளின் பங்களிப்பு ரொம்ப அவசியம்.. அதிகமானோரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அக்கட்டுரையை இங்கே பகிர்கிறேன்..
நன்றி.http://www.thinakaran.lk