அதிலும் விவசாயத்துறையின் வளர்ர்ச்சி என்பது ஒரு நாட்டிற்கு மிக முக்கியமானது. அதாவது மனிதனின் அடிப்படை தேவைகளுள் ஒன்றான உணவுத்தேவை இதன்மூலமே பூர்த்திசெய்யப்படுகிறது. ஒரு நாட்டு மக்கள் அவர்களுக்கு தேவையான உணவை அவர்களே உற்பத்தி செய்வதன் மூலம், உணவுத்தேவையை பூர்த்தி செய்து,அதில் தன்னிறைவு பெறுகிறார்கள் எனில் அவர்கள் வேறு நாடுகளில் தங்கியிருக்கவேண்டிய தேவை மிகக்குறைவே. அதையே தன்னிறைவுப்பொருளாதாரம் எனவும் அழைப்பர்.
இன்றைய கணினியுகத்தில் விவசாயம் என்பது மிகவும் குறைந்துகொண்டு வரும் ஒரு தொழிலாகவே கானப்படுகிறது. கிராமப்புறங்களில் கூட இன்று அதிகளவானோர் விவசாயத்தை விட்டுவிட்டு ஏனைய தொழில்களை நாடிச்செல்கின்றனர். இதற்கு பல காரணங்களை கூறலாம். பொதுவாக நமது தெற்காசிய நாடுகளை பொருத்தமட்டில் விவசாயிகள் முன்னேற முடியாத ஒரு நிலையே கானப்படும். அதாவது ஏனைய தொழில் துறைகளில் உள்ளவர்கள் படிப்படியாக தம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளும் போது, விவசாயிகள் மட்டும் எப்போதும் ஏழைகளாகவும் வறுமையில் வாடுபவர்களாகவுமே நம் சமூகத்தில் வாழ்கிறார்கள். விவசாயத்தை வெறுப்படைய செய்யும் மற்றுமொரு பிரதான காரணி விவசாய உற்பத்திகள் மீதான சுரண்டல், இங்கே மழை வெயில் பாராது கஷ்டப்பட்டு உழைக்கும் விவசாயிகள் ஈட்டும் இலாபத்தை விட அதனை சந்தைப்படுத்துவோர்,விநியோகிப்போர் அதிக லாபம் ஈட்டுகின்றனர்.
விவசாயத்தை தற்காலத்தில் தொடர முடியாமைக்கு இன்னுமொரு காரணம் போதியளவு நீர்ப்பாசண திட்டங்கள் இல்லாமையே. இலங்கையின் நிறைய பிரதேசங்களில் வானத்து மழையை நம்பியே அதிகளவானோர் இன்று விவசாயம் செய்கின்றனர். இலங்கையில் இப்போது கானப்படுகின்ற நீர்ப்பாசண திட்டங்களில் அதிகமானவை பழைய மன்னர் காலத்திலே கட்டமைக்கப்பட்டதாகும். இலங்கையை ஆண்ட மன்னர்களில் என்னைக்கவர்ந்த ஒரு விடயம் அவர்கள் கட்டிய ஆயிரக்கணக்கான குளங்களும் நீர்ப்பாசண திட்டங்களுமாகும். அதன் பயன்பாடு இன்றுவரை தொடர்கிறது. அதன்மூலம் இலட்சக்கணக்கான மக்கள் இன்னமும் தன் ஜீவாதாரத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் முக்கியமானவர் பராக்கிரமபாகு என்ற மன்னராகும். 12ம் நூற்றாண்டில் (1153–1186) இலங்கையின் பொலன்னறுவைவை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தவர். இவரின் ஆட்சிக்காலமே “இலங்கையின் பொற்காலம்” என இன்றுவரை வர்ணிக்கப்படுகிறது. அன்றைய காலத்தில் உணவுற்பத்தியில் தன்னிறைவு கனடது மட்டும்ல்லாமல் வெளிநாடுகளுக்கும் அரிசி ஏற்றுமதி செய்யும் நிலையில் விவசாயம் வளர்ச்சியடைந்து கானப்பட்டதே இவரின் புகழுக்கு காரணம்.
பராக்கிரமபாகு மன்னனின் இன்னுமொரு சிறப்பம்சம் ஏராளமான குளங்களையும் நீர்ப்பாசண திட்டங்களையும் ஏற்படுத்திக்கொடுத்ததாகும். மேலும் அவற்றிலே மிகவும் உறுதியாகவும் இருந்திருக்கிறான். ஒரு பிரதான இன்றுவரை போற்றப்படுகின்ற கொள்கை மூலம். “வானிலிருந்து விழுகின்ற ஒரு துளி நீரேனும் விவசாயத்திற்கு பயன்படாமல் கடலை சென்றடைய விடக்கூடாது -“not even a little water that comes from the rain must flow into the ocean without being made useful to man” -இதுவே அந்த கொள்கையாகும். பராக்கிரமபாகுவால் அமைக்கப்பட்ட திட்டங்களுள் மிக முக்கியமான பராக்கிரம சமுத்திரமாகும். இதன் பரப்பளவு 22 சதுரKM ஆகும். இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய குளமும் இதுவே. அதன் புகைப்படங்கள் கீழே.